வளவனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக வளவனூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2024-02-07 03:19 GMT

மின் தடை

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டவுன் மின்பாதை மற்றும் மோட்சகுளம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பனங்குப்பம், கிராஸ் ரோடு, நல்லரசன் பேட்டை, சகாதேவன்பேட்டை, அற்பிசம்பாளையம், புதுப்பாளை யம், தாதம்பாளையம், சிறுவந்தாடு, ராமையன்பாளையம், சுந்தரி பாளையம், மழவராயனூர், வளவனூர், உப்புமுத்தாம்பாளையம், மோட்சகுளம், பக்கமேடு, எம்.ஜி.ஆர். நகர், கூட்டுறவு நகர், குமார குப்பம், புதுகுளம், அய்யனார் கோவில், காந்திநகர், கள்ளிக்குளம், புத்து ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News