கனவனஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

கனவன அள்ளி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-02-06 01:43 GMT
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மின் கோட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கனவன அள்ளி துணை மின் நிலையத்தில் நாளை அவசரக்கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெலமாரனஅள்ளி கோட்டூர், சோமனஅள்ளி,குழிக்கல், மோட்டூர், ஒப்பிளி, கரகூர், புலிக்கரை பத்ரஅள்ளி, காட்டம்பட்டி  ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News