பிரதோஷ வழிபாடு - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது .இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. மழை பெய்து நீரோடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பக்தர்களின் பாதுகாப்பை கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் தை அமாவாசை முன்னிட்டு இன்று முதல் வருகிற பத்தாம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் வழியாக மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளின் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். வருகிற 9 தேதி தை அமாவாசை வழிபாட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் கோவில் அறநிலைத்துறையினர் செய்து வருகின்றனர்.