ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி

ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூய்மைப்படுத்தினர்.

Update: 2023-12-28 05:06 GMT
தூய்மை பணி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதி பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் வடியத் துவங்கிய நிலையில் இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், ஆத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுத்தப்படுத்தி கொடுத்தனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News