ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2024-06-15 05:35 GMT

ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கருவூல அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ேஷக்ஜாகீர்உசேன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ரஹீம் சிறப்புரையாற்றினார். பிற சங்க மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், குணசேகரன், சர்ச்சில்காரல் மார்க்ஸ் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். ஊதியம் செலுத்தும் முறையில் மாதம் தோறும் தாமாகவே வரிப்பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறைப்படி ஆசிரியர்களின் விருப்பபடி வருமான வரி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Tags:    

Similar News