கார் விபத்தில் பிரிண்டர்ஸ் உரிமையாளர் உயிரிழப்பு!
விராலிமலை அருகே கார் மோதியதில் பிரிண்டர்ஸ் உரிமையாளர் உயிரிழந்தார்.
Update: 2024-04-18 05:09 GMT
விராலிமலை அருகே கார் மோதியதில் பிரிண்டர்ஸ் உரிமையாளர் உயிரிழந்தார். விராலிமலை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குமரகுரு மகன் மதிவாணன் (40). இவர் பிரிண்டர்ஸ் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், மதிவாணன் தனது இருசக்கர வாகனத்தில் மேலபச்சக்குடி பிரிவு சாலை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மதிவாணன் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற விராலிமலை போலீஸார், மதிவாணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மணப்பாறை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.