தந்தை இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

விழுப்புரம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-30 10:15 GMT

தந்தை இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் சேடன் குட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ரஜினிகாந்த் (வயது 21). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவ னத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவரது தந்தை முருகன் கடந்த 25-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்த ரஜினிகாந்த் சொந்த ஊருக்கு வந்து தந்தை இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பி றகு அவர் தந்தை இறந்த சோகத்தில் மனஉளைச்சலுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்த ரஜினிகாந்த், நேற்று வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசி றியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுததுடன், இதுபற்றி திண் டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீ சார் விரைந்து வந்து ரஜினிகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை இறந்த துக் கத்தில் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News