தனியார் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை !
எஸ்விஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.தீக்ஷித். இவர் சிலம்பம் மரபு வழி விளையாட்டு போட்டியை 2 மணி நேரம் நிற்காமல் நிகழ்த்தி நோபால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
Update: 2024-04-26 07:35 GMT
ஈரோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.தீக்ஷித். இவர் சிலம்பம் மரபு வழி விளையாட்டு போட்டியை 2 மணி நேரம் நிற்காமல் நிகழ்த்தி நோபால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்த சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், எஸ்விஎன் பள்ளியின் தலைவர் ஆண்டவர் சின்னச்சாமி, பள்ளியின் தாளாளர் பெரியசாமி, முதல்வர் தர்மராஜ் ஆகியோர் பங்கேற்று சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் நோபல் தலைமை இயக்குநர் வினோத் மற்றும் வாடிக்கையாளர் நிர்வாகி ஜனனிஸ்ரீ ஆகியோர் கண்காணித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சிக்கு எஸ்விஎன் பள்ளியின் காரத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் கந்தவேல் பயிற்சி அளித்திருந்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.