தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-17 11:51 GMT
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று கொடிக்குறிச்சி, ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இம்முகாமில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News