சேலத்தில் 21-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சேலத்தில் 21-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 05:01 GMT

சேலத்தில் 21-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளன.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News