கலெக்டர் அலுவலகம் அருகே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கலெக்டர் அலுவலகம் அருகே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-22 14:20 GMT

கலெக்டர் அலுவலகம் அருகே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை கலெக் டர் அலுவலகம் அருகே ஊழி யர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News