கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்க கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2024-01-06 08:17 GMT

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் அருள் தலைமை தாங்கினார். விஏஓ கோபி அனைவரையும் வரவேற்றார். டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்க கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News