சேலம், கிருஷ்ணகிரியில் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2024-05-08 03:48 GMT

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 

சேலம் தளவாய்பட்டியில் இரும்பாலை ரோட்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் -1 சந்தீப் சிங் நேகி தலைமையில் நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் தொழிலாளர் வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதே குறைதீர்க்கும் கூட்டம் அன்றைய தினம், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்-2 ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு கருங்கல்பாளையத்தில் சேலம் பிரதான சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-2 டி.ஆர்.வீரேஷ் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற குறைதீா்க்கும் கூட்டம் நடக்கிறது.

அந்த வகையில், நாளை மறுநாள் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில், வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையில் தொழில் அதிபர்களுக்கும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டங்களில் வருங்கால வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிதிநிகள் அது குறித்த விவரங்களுடன், தங்களது பெயர், நிறுவன முகவரி மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் ஈரோடு மாவட்ட அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரியில் ro.salem@epfindia.gov.in, do.krishnagiri@epfindia.gov.in, do.erode@epfindia.gov.in பதிவு செய்யலாம் என்று மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-1 சந்தீப் சிங் நேகி ெதரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News