காட்டுமன்னார்கோவில் அருகே நிதியுதவி வழங்குதல்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2024-06-16 12:55 GMT
நிதியுதவி
கடந்த சில தினங்களுக்கு முன்பு குவைத்தில் தீ விபத்தில் இறந்து போன காட்டுமன்னார்கோவில் முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்தை சின்னதுரையின் மனைவி சத்தியா தாயார் சரோஜா ஆகியோரிடம் கிராமத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் வழங்கினர்.
Tags:    

Similar News