பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கல்

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மேட்டு தெரு நண்பர்கள் குழு சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-16 13:48 GMT

பக்தர்களுக்கு உணவு வழங்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் அன்று பழனி பாதயாத்திரை செல்லும் ஏராளமான பக்தர்களுக்கு ராசிபுரம் மேட்டு தெரு நண்பர்கள் குழு சார்பாக பக்தர்களுக்கு பால், பிஸ்கட், உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நகர வளர்ச்சி மன்ற தலைவர் முன்னாள் கவுன்சிலர் V.பாலு  கலந்து கொண்டு அனைவருக்கும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மோகன்தாஸ், டீக்கடை பாலு, பிரபு, ஸ்டார் கார்த்திகேயன் , டீ கடை கார்த்தி, ராஜா, மதன் ஹரி,மணி,யுவராஜ் நாகராஜ் ,தீபக் , ஜெகன், சீனி, கோகுல்,மகளிர் அணி அனிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News