தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
வடக்குமேலூர் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2023-10-20 15:34 GMT
நிவாரணம் வழங்கல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குமேலூர் கிராமத்தில் உள்ள தெற்கு தெரு வெங்கடேசன்-மணிமேகலை மகன் வினோத்குமார் கூரை வீடு இன்று மதியம் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து சேதமானது. இதனை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.