விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 பயிலும் 131 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கினார்.

Update: 2024-02-01 03:24 GMT
கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா, தரகம்பட்டியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு, பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கடவூர் ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரபாகர், திமுக கட்சி மூத்த நிர்வாகிகள் ராஜேந்திரன், அழகர், வேல்முருகன், போண்டா ராஜா, பள்ளியின் முதுகலை ஆசிரியர் பாலசுந்தரம் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, இந்த பள்ளியில் +1 பயிலும் மாணவர்கள் 54 பேர், மாணவிகள் 77 பேர் என மொத்தம் 131 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News