தெடாவூர் அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்

தெடாவூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-04 10:12 GMT
இலவச சைக்கிள் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 94 பேருக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை தலைமை வகித்தார். தெடாவூர்பேரூராட்சி தலைவர் வேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். விழாவில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை சின்னதுரை, வேல் ஆகியோர் வழங்கினர்.

பள்ளியின் துணை தலைமையாசிரியர் ஜெயபால், பேரூராட்சி கவுன்சிலர் வேல்முருகன், சரவணன், பாலசுந்தரம், ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News