எடப்பாடியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா வழங்கினார்.

Update: 2024-02-06 06:13 GMT

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 311மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் அரசுஉதவிபெரும் பள்ளிகளில் +1படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லாத மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1பயிலும் மாணவர்களுக்கு எடப்பாடி நகர்மன்ற தலைவரும் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான D.S.M.பாஷா மிதிவண்டிகளை வழங்கினார். 2023-2024ம்ஆண்டு +1பயிலும் 311மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர்கள் செந்தில் குமார், ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News