பல்லடத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பல்லடத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-06 13:24 GMT

தெருநாய்கள்

பல்லடத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை. பல்லடம் அருள்ஜோதி நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்தப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருவதாகவும்,

இதனால் முதியவர்கள் குழந்தைகள் வெளியே செல்வதற்கு அச்சப்படுவதாகவும் இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருள் ஜோதி நகரில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது எங்கள் பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இவற்றை கட்டுப்படுத்தகோரி அதிகாரியிடம்,

புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை தெருநாய்கள் கடித்துவிட்டது. பெற்றோர் உடனடியாக வந்து நாய்களை விரட்டியதால் குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர்.

மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News