தெருநாய் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

திருத்தணி அருகே தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

Update: 2023-10-28 03:02 GMT

சாலையில் திரியும் தெரு நாய்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே  காசிநாதபுரம்  கிராமத்தில் 50க்கும் மேற்ப்பட்ட நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றது. திருத்தணியிலிருந்து நாகலாபுரம்  மாநில நெடுஞ்சாலையில்  உள்ள காசிநாதபுரம் வழியாக ஏராளமான கிராமமக்கள் தங்களது வேலை முடித்துக்கொண்டு இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். கடந்த சில காலமாக  இரவு நேரங்களில் பிரதான சாலையில் தெரு நாய்கள் கூட்டமாகப் படுத்திருப்பது, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை சுற்றி வளைத்துத் துரத்துவது, கடிப்பது போன்ற சம்பவங்கள்  நடைபெற்று வருவதால், அவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்குவதோடு சாலையில் சுதந்திரமாகச் செல்ல முடியாமல்  பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.   நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News