108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை!

வீரலட்சுமி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை.

Update: 2024-04-24 05:01 GMT
புதுக்கோட்டை மாவட்டம் செல்லுக்குடி கிராமத்தில் உள்ள வீரலட்சுமி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் மழை பெய்ய வேண்டியும் 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் உள்ளிட்ட நவகிரக ஹோமங்கள் செய்யப்பட்டன இதனை தொடர்ந்து பெண்கள் குத்து விளக்குக்கு மலர்கள் அறிவித்து மஞ்சள் குங்குமம் வைத்து வேத பண்டிதர்கள் கூறும் வேதங்களை சொல்லி அர்ச்சனை செய்தனர் முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன உலக நன்மைக்காகவும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது பின்னர் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News