வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குசாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-28 14:16 GMT

வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது 

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி அடப்பன்வயலில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (28.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News