சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டப் பகுதியில் பொழியும் மழையால் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-07 09:20 GMT

மழை

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த சில மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம்,பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக மிதமான மழையானது பெய்து வருகிறது.

இதனால் தற்போது சம்பா பயிர்கள் நல்ல நிலையில் விளைந்துள்ள நிலையில் மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News