கொடைக்கானலில் மழை - மழையில் நனைந்தபடி சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி

கொடைக்கானலில் நீண்ட நாளுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உற்சாகத்துடன் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தனர்.

Update: 2024-05-10 01:42 GMT

மழையில் நனைந்தபடி சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதமாக வெட்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நண்பகல் வேளையில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக நல்ல மழை பெய்தது.

குறிப்பாக ஏரி சாலை, பேருந்து நிலையம், மூஞ்சுக்கள், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது . திடீரென பெய்த இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் மழையில் நனைந்த படியே படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

Similar News