குமரி அணை பகுதிகளில் மழை : நீர் மட்டம் உயர்வு !

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.10 அடியாக உள்ளது.

Update: 2024-06-08 07:04 GMT

குமரி அணை

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.19 அடி யாக இருந்தது. அணைக்கு 670 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 535 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.80 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.10 அடியாக உள்ளது.
Tags:    

Similar News