வரதர் கோயிலில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் பக்தர்கள் அவதி
முறையான வடிகால் வசதி செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
Update: 2023-11-30 05:41 GMT
வரதராஜ பெருமாள் கோவிலில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுத்தில், சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்களில் கொடி மரம் அருகில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கோயில் கொடிமரம் அருகில் மழைநீர் தேங்காமல் இருக்க முறையான வடிகால் வசதி ஏற்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.