குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக கனமழை
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
Update: 2024-06-05 17:26 GMT
மழை
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.