ராமநாதபுரம்: நடிகருக்கு பிடி வாரண்ட்
ராமநாதபுரம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவு.
Update: 2023-12-08 08:50 GMT
ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி இறால் பண்ணை நடத்தி வருகிறார். இந்த தொழிலை விரிவு படுத்துவதற்காக 15 கோடி வங்கி கடன் பெற விண்ணப்பித்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் வங்கி கடன் வாங்கி தருவதாக 14 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு வங்கி கடன் வாங்கி கொடுக்கவில்லை. பணம் திரும்ப தர மறுத்ததால் இது குறித்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முனியசாமி வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றத்திற்கு பலமுறை ஆஜராகாததால் ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நடிகர் பவர்ஸ்டாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசாருக்கு நீதிபதி நீலேஸ்வரன் உத்தரவிட்டார்.