ராமநாதபுரம்: மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரத்தில் இன்று கடலுக்கு சென்ற ஒரு படகையும், எட்டு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றனர்.

Update: 2023-12-06 11:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இன்று மீன் பிடிக்கச் சென்றனர். ராமேஸ்வரம் பாம்பன் தங்கச்சிமடம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 

மீன் பிடிக்க தேவையான வலைகள், டீசல், ஐஸ் கட்டி, உணவு பொருட்கள் ஆகியவற்றை சேகரித்துக்கொண்ட மீனவர்கள், எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகேமீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை ஒரு படகையும் அதிலிருந்து ஏழு மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர் நாள் மீனவ கிராமங்களில் சோகம் நிலவியது.

Similar News