ராமநாதபுரம் : அதிமுகவினர் சாலைமறியலால் பரபரப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுகவினர் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .

Update: 2024-06-24 07:42 GMT

தமிழக முழுவதும் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் கள்ளச்சாராயத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியினர் திடீரென முதலமைச்சரின் உருவம் பொறித்த பிளக்ஸ் கொடும்பாவி எறிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு பதட்டமும் நிலவியது.

  போலீசார் அவர்களிடம் தடுத்து கொடும்பாவியை பறித்து சென்றனர் அதன் பின்பு அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர் இதை அறிந்த ஏராளமான அதிமுகவினர் திடீரென கேணிக்கரை காவல் நிலையம் முன்பு கூடி முற்றுகையிட்டனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மணிகண்டன் மற்றும் ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஆகியோர் போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News