நாமக்கல்லில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: திரளானோர் பங்கேற்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாமக்கல்லில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர்.

Update: 2024-04-10 16:32 GMT

நாமக்கல்லில் ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாமக்கல் மாவட்டம் சார்பில் பெருநாள் தொழுகை நாமக்கல் , R.P. புதூர், குட்டை தெரு, தொழுகை திடல் வளாகத்தில் நடைபெற்றது. தொழுகையில் மாவட்ட தலைவர் தவ்ஃபீக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட செயலாளர் முஸ்தபா, துணைச் செயலாளர் ரிஸ்வான், துணை தலைவர் ஜான் பாஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News