அரியலூர் அருகே சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்

Update: 2024-05-14 15:04 GMT
விக்னேஷ் குமார்

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவர் ஆரணியில் வேலை செய்து வருகிறார் இவர் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர்,

கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர் வழக்கின் விசாரணை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணையில் விக்னேஷ் குமாருக்கு சிறுமியை கடத்திச் சென்றது கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30,000 அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்

Tags:    

Similar News