ராசிபுரம் ஸ்ரீ பால முருகனுக்கு சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம் அருகே தை அமாவாசையை முன்னிட்டு பால முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2024-02-10 07:57 GMT

சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பால முருகனுக்கு அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரமாக வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீ பால முருகனுக்கு மகா தீபாரனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News