ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

Update: 2024-01-09 06:09 GMT

ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறியதை நம்பி ரூ.11.25 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடமிருந்து பணம் பெற்றதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த பணம் ரூ.11.25 லட்சத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட எஸ்பி பிரதீப் பாதிக்கப்பட்ட நபரரை நேரில் அழைத்து ஒப்படைத்தார்.
Tags:    

Similar News