கந்தர்வகோட்டை அருகே 5 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

கந்தர்வகோட்டை அருகே 5 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது.

Update: 2024-06-27 08:56 GMT

மீட்கப்பட்ட கோயில் நிலம்

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 83 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

இதுதொடர்பாக திருக்கோயில் செயல் அலுவலர் அறிவுறுத்தலின் அடிப்படையில், நிலத்தை கோயி வசம் ஒப்படைப்பதாக ஆக்கிரமிப்பாளர்கள்தெரிவித்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் கோயில் நிலங்கள் வட்டாட்சியர் வனிதா,

திருக்கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் மூலம் திருக்கோயில் சுவாதீனத்தின் கீழ் நிலம் கொண்டு வரப்பட்டது என்ற அறிவிப்பு பலகை அந்த நிலத்தில் புதன்கிழமை வைக்கப்பட்டது.

Tags:    

Similar News