செங்கோட்டை சித்தி விநாயகர் கோவில் வருஷாபிஷேகம்
செங்கோட்டை சித்தி விநாயகர் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 09:03 GMT
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் வளர்க்கப்பட்டு விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,
தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .