சிறுமிக்கு பாலியல் தொந்தரவு உறவினர் போக்சோ சட்டத்தில் கைது!

ஊட்டி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-14 11:46 GMT

கைது 

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியினரில் கணவர் பெயிண்டராகவும் மனைவி கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். பெயிண்டர் என்பதால் கணவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்த நிலையில் தம்பதியினரின் இரண்டு குழந்தைகளில் முதல் குழந்தை நான்காம் வகுப்பும், இரண்டாவது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பும் படித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளானது தெரியவந்தது. சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் சமூக நலத்துறைக்கும், ஊட்டி ஊரக காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல் ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை செய்ததில் தம்பதியினரின் உறவினரான பெயிண்டர்‌ விஜயராஜ் 29, என்பவர் சிறுமியிடம் சாக்லேட் தருவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விஜயராஜை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர். உறவினர் ஒருவரே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News