உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

தூத்துக்குடியில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

Update: 2024-01-05 07:04 GMT

நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி தூத்துக்குடி மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். குடிமைப்பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம்,வட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News