மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு.

Update: 2024-01-30 09:47 GMT
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில்,செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை அருகில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற தலைவர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,பொதுக்குழு உறுப்பினர்கள் ,நகர மன்ற உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News