அய்யம்பாளையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

அய்யம்பாளையத்தில் எம்எல்ஏ தலைமையில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-26 09:44 GMT

அய்யம்பாளையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, மணவாடி ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணாயபுரம் எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற, அரசு கலை திருவிழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

இந்த நிகழ்ச்சியில் மணவாடி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் வசந்தி சரவணன் உள்ளிட்ட பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News