சேதமடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை சீரமைக்க கோரிக்கை....

சேதமடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-08 11:34 GMT

தடுப்பு கம்பி

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - நெம்மேலி சாலை உள்ளது. இச்சாலையின் இடையே, பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கானத்துார், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, வளைவு பகுதியில் சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

ஆனால், பல விபத்துகளால் தடுப்புகள் சேதமடைந்து, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கின்றன. அவை, பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News