குழித்துறை-ஆலஞ்சோலை சாலையை சீரமைக்க கோரிக்கை.

Update: 2023-11-02 06:32 GMT

சாலையின் நிலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குழித்துறை - ஆலஞ்சோலை சாலை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை மேலத்தெரு முதல் புண்ணியம் சந்திப்பு வரை சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகின்றது. இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலை குறுகி கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அருமனை மைய பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் (குவாரி) மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தற்போது சாலை குண்டும் குழிகளாக சேதமாகி உள்ளது. எனவே இச்சாலையை உடனே சீர்செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) அருமனை வட்டாரக்குழு சார்பாக நெடுஞ் சாலைதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என  கூறியுள்ளனர்.
Tags:    

Similar News