இளையான்குடி அருகே ஊரணியை மீட்டுத்தர கோரிக்கை

இளையான்குடி அருகே ஊரணியை வீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2024-01-04 08:35 GMT

மனு அளித்த மக்கள் 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா பஞ்சனூர் காலனியில் கடந்த 1994 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் காலனி வீடும், ஊரணியும் வெட்டி தரப்பட்டது.

இந்த ஊரணியிலிருந்து தண்ணீர் எடுத்து காலனி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த தனி நபர் ஒருவர் தங்களுக்கு இந்த ஊரணி சொந்தம் என்றும், தனது பெயரில்தான் பட்டா மற்றும் பத்திரம் உள்ளது என்றும்,

பிரச்சனை செய்து வருவதாகவும், இந்நிலையில் கிராம மக்களுக்கு சொந்தமான ஊரணியை மீட்டுத் தரும்படி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

Tags:    

Similar News