பள்ளி செல்லாக் குழந்தைகள் 11 பேர் மீட்பு - ஆட்சியர் தகவல்

Update: 2023-12-01 04:51 GMT

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு குழு காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடை, சந்தைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் மூலம் கல்லலில் 5, காளையார்கோவிலில் 6 என 11 குழந்தைகள் பணி புரிந்து வந்த நிலையில் அவர்களை மீட்டு பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும் சிறார்கள் பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News