காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் மீட்பு

விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கால்நடை வளர்ப்போரையும், 250 ஆடுகளையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Update: 2023-10-31 04:06 GMT

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சக்திவேல் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிகமான மழை பெய்ததால், கண்மாயில் திடீரெனக் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.  இதில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார். இதைப்பார்த்த மாவிலோடை கிராமத்தை சேர்ந்த மக்கள், இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சக்திவேலையும், 250 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.
Tags:    

Similar News