குருவியை விழுங்கிய பச்சைப் பாம்பு மீட்பு

திருப்பரங்குன்றம் அருகே குருவியை விழுங்கிய பச்சைப் பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2023-12-26 16:31 GMT

குருவியை விழுங்கிய பச்சை பாம்பு

குருவியை விழுங்கிய பச்சைப் பாம்பு மீட்பு மதுரை திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் குருவியை விழுங்கிய பச்சை பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சம்பளம் கிராமம் கீழத்தெருவில் தங்கராஜ் தனது வீட்டில் உள்ள மரத்தில் பச்சை பாம்பு ஊர்ந்ததை பார்த்துள்ளார். மரத்திற்கு அருகே சென்று உற்றுப் பார்த்ததில் பச்சை பாம்பு பெரிதாக இருந்ததால் தங்கராஜ் அச்சமடைந்தார் உடனே வீட்டிலிருந்து வந்த அனைவரும் பச்சை பாம்பை பார்த்த ஆட்சிரியத்துடன் பார்த்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருநகர் பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுவை தொடர்பு கொண்டனர் ஸ்நேக் பாபு குருவியை விழுங்கிய நிலையில் தலையை தூக்கி நின்ற தாண்டவம் ஆடிய பெரிய பச்சை பாம்பு லாபமாக மீட்டு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தார்.

Tags:    

Similar News