நாட்டை காப்போம் கூட்டமைப்பினர் காந்திக்கு மரியாதை

மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு நாட்டை காப்போம் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-01-31 11:22 GMT

நாட்டை காப்போம் கூட்டமைப்பினர் 

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நாட்டைக் காப்போம் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து வீர வணக்க முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் நாட்டைக் காப்போம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன், இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சந்தனம், பேராசிரியர் இ. தேவசகாயம், மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், வழக்கறிஞர் பால்பிரிட்டோ, சமம் குடிமக்கள் இயக்கத்தின்  சண்முகவேலு, உள்ளிட்ட குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்  கார்த்திகேயன் சிலுவை உள்ளிட்டோருடன் அக்கட்சியைச் சேர்ந்தோர் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News