வந்தவாசியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க முப்பெரும் விழா

வந்தவாசியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2023-12-09 16:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்க முப்பெரும் விழா நடந்தது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வந்தவாசி வட்ட கிளை சார்பில் மாநாடு மற்றும் கல்வெட்டு திறப்பு விழா கொடியேற்றுதல் ஆகிய முப்பெரும் விழா நேற்று தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் வெங்கடேஷ் கல்வெட்டினை திறந்து வைத்தார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் கொடியேற்றி சங்க கொடியை ஏற்றினார்.

இதில் முன்னாள் சங்க நிர்வாகிகள் பரதேஸ்வர சக்கரவர்த்தி. தியாகராஜன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்டதலைவர் சிவசங்கர், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவர் பிரபாகரன் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேசினர்.

Tags:    

Similar News