சாலையோர பள்ளத்தால் காட்டுப்பாக்கத்தில் விபத்து அபாயம் !

காட்டுப்பாக்கம் சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-28 12:04 GMT

பள்ளம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் - மானாம்பதி சாலையில், உத்திரமேரூர் ஏரிக்கரை அருகே பிரிந்து, காட்டுப்பாக்கம் வழியாக மேனலுார் இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலையில், ஏரிக்கரை கலங்கல் எதிரே உள்ள காட்டுப்பாக்கம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு ஓரத்தில் பள்ளம் உள்ளது. காட்டுப்பாக்கம், மேனலுார் மற்றும் அரசாணிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த சாலையை பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள் மூலம் உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மின்விளக்கு வசதி இல்லாத இந்த சாலையில், சாலையோர பள்ளத்தால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காட்டுப்பாக்கம் சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்."
Tags:    

Similar News